இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனா இரண்டாவது அலை கைமீறிவிட்டது: தமிழக அரசு

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை கைமீறிச் சென்று விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

News image
கரோனா இரண்டாவது அலை கைமீறிவிட்டது: தமிழக அரசு
Updated On :15 ஏப்ரல் 2021, 6:22 am

DIN


சென்னை: தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை கைமீறிச் சென்று விட்டதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர்  தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை தமிழகத்தில் தற்போது தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட தொற்று பரவல் மிக மோசமாக உள்ளது. தற்போது கரோனா பாதிப்பின் இரண்டாவது அலை எல்லைத் தாண்டி, கைமீறிவிட்டது.

தமிழகத்தில் போதிய அளவில் கரோனா தடுப்பூசி கையிருப்பில் இருப்பதாகவும், 40 வயதானவர்களுக்கும் விரும்பினால்  கரோனா தடுப்பூசி போடும் திட்டம் உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தமிழக அரசு தரப்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.