/

வேதாரண்யம் அருகே இடியுடன் கூடிய மழை

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வாய்மேடு சுற்றுப் பகுதியில் இடியுடன் கூடிய மழை இன்று (ஏப்.15) காலை முதல்  பெய்து வருகிறது.

News image
வாய்மேடு பகுதியில் நெல் தரிசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்
Updated On :15 ஏப்ரல் 2021, 6:03 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வாய்மேடு சுற்றுப் பகுதியில் இடியுடன் கூடிய மழை இன்று (ஏப்.15) காலை முதல்  பெய்து வருகிறது. 

வாய்மேடு, தகட்டூர், பஞ்சநதிக்குளம், ஆயக்காரன்புலம் உள்ளிட்ட கடலோர கிராமப்புறங்களில் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

பின்னர் காலை 7.30 மணி தொடங்கி தென் மேற்கு திசையில் இருந்து வீசிய பலத்த காற்றுடன் நல்ல மழைப் பொழிவு ஏற்பட்டது. இது சுமார் 1 மணி நேரம் நீடித்தது. தொடர்ந்து மந்தமான வானிலையே நீடித்து வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.