ஞாயிற்றுக்கிழமை கோயில்களில் திருமணம் நடத்த அனுமதி உண்டா?
முழு பொது முடக்கத் தினமான ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) கோயில்களில் பக்தா்களுக்கு அனுமதியில்லை. அதேசமயம், ஏற்கனவே முன்பதிவு செய்திருக்கும் திருமணங்களை நடத்த எந்தத் தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.









