விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

மே மாத மத்தியில் கரோனா உச்சத்தில் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்: ஆணையர்

மே மாதம் மத்தியில் கரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

News image

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)

Updated On :23 ஏப்ரல் 2021, 5:37 am

DIN

மே மாதம் மத்தியில் கரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

இன்று கிண்டியில் கரோனா பரிசோதனை  மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், 'கரோனா தொற்று ஏற்பட்டு தீவிரமாக அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்லுங்கள். 

அறிகுறிகள் இன்றி கரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது கரோனாவுக்கான லேசான அறிகுறிகள் இருந்தாலோ உங்கள் வார்டு சுகாதார ஆய்வாளரை தொடர்பு கொண்டு வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். வீட்டில்தனிமைப்படுத்திக்கொள்ள  முடியாதவர்கள் கரோனா கண்காணிப்பு மையங்களுக்குச் செல்லுங்கள்.  அங்கு உங்களுக்கு அனைத்துவிதமான பரிசோதனையும் எடுக்கப்படும். 

லேசான அறிகுறிகள் இருந்தால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறே தொற்றின் தன்மையைப் பொருத்து நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறார்கள் . 

நேற்று சென்னையில் 3,600 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில், 1700 பேர் கரோனா கண்காணிப்பு மற்றும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனைகளுக்கோ அல்லது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோ உள்ளனர்.  

மே மாதம் மத்தியில் கரோனா உச்சத்தில் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கரோனா விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். 

சென்னையில் 4 நாள்கள் முகக்கவசம் அணிந்தால் கரோனா பரவல் குறைந்துவிடும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.