ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

வாடிக்கையாளருக்கு கரோனா: தம்மம்பட்டியில் வங்கி மூடல்

தம்மம்பட்டியில் வாடிக்கையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், வங்கி மூடப்பட்டது.

News image
வாடிக்கையாளருக்கு கரோனா: தம்மம்பட்டியில் வங்கி மூடல்
Updated On :23 ஏப்ரல் 2021, 7:59 am

DIN

தம்மம்பட்டியில் வாடிக்கையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், வங்கி மூடப்பட்டது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் திருச்சி செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிர்புறம், ஐ.ஓ.பி. வங்கி உள்ளது. நேற்று காலை, வெளியூரைச் சேர்ந்த ஆண் வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கு வந்து சென்றுள்ளார். அவருக்கு முன்பு எடுத்திருந்த கரோனா பரிசோதனையில், தொற்று இருப்பது உறுதியானது. இந்த தகவல், தம்மம்பட்டியில் உள்ள வங்கிக்கு, உடனடியாக தெரிவிக்கப்பட்டது. 

அதையடுத்து, நேற்று பிற்பகலில் வங்கி மூடப்பட்டு, தம்மம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத்துறை பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.  வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை, பேரூராட்சி நிர்வாகத்தினர், வங்கியில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்தனர். அதனால், வங்கி இன்றும் மூடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.