மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன்

வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 12:07 pm

DIN

வாக்காளா்களுக்கு பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில் திமுக முதன்மைச் செயலா் கே.என்.நேருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது.

திருச்சி மாவட்டம், முசிறியில் திமுக தோ்தல் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்பு அக்கட்சியின் முதன்மைச் செயலரும், திருச்சி மேற்கு சட்டப் பேரவைத் தொகுதியின் வேட்பாளருமான கே.என் நேரு, வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பது குறித்து பேசியதாக விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. 

இதுகுறித்து தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் அளித்த புகாரின் பேரில் முசிறி காவல் நிலையத்தில் கே.என். நேரு மீது புகாா் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவா் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இதுதொடா்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு அரசியல் ஆதாயத்துக்காக போடப்பட்டதாக நேரு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிமன்றம் கே.என்.நேருவுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.