மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வைகை ஆற்றில் முழ்கி இருவர் பலி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

News image
வைகை ஆற்றில் முழ்கி உயரிழந்தவர்கள்
Updated On :23 ஏப்ரல் 2021, 9:11 am

DIN

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இருவரின் சடலங்களை போலீஸார் வெள்ளிக்கிழமை மீட்டனர்.

ஆண்டிபட்டி அருகே மணியாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(30). இவர் கேரளாவில் உள்ள தனியார் எஸ்டேட்டில் கூலி வேலை செய்து வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த  ஞானராஜ்(45) என்பவர் எலக்ட்ரிசியன் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை வைகை அணைக்கு குளிக்கச் சென்றனர். 

அப்போது வைகை அணைப் பகுதியில் உள்ள பழைய பாலம் அருகே ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வைகை அணை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார் தீயணைப்புத்துறையினரின் உதவியுடன் ஆற்றில் எங்குத் தேடியும் இருவரின் உடல்களும் கிடைக்கவில்லை. 

இரவு நேரம் தேட முடியாத நிலையில் மீண்டும் வெள்ளிக்கிழமை காலை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு தீயணைப்புத்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டனர். இதையடுத்து இருவரின் உடலையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வைகை அணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.