தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!ஈரானில் மகளிர் பள்ளி மீது தாக்குதல்: அமெரிக்க படைகளே காரணம் - ஆதாரம் வெளியானது!ஈரானின் உச்ச தலைவராகிறார் மறைந்த கமேனியின் மகன்: ரஷிய அதிபர் புதின் வாழ்த்து!நாடாளுமன்றத்தைவிட்டு ஓடிவிட்டார் மோடி! மேற்காசியப் போர் பற்றி விவாதிக்க வேண்டாமா? - ராகுல் காந்தி
/

கரோனா பாதிப்பில் அபாயக் கட்டத்தில் சென்னை!

சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், உச்சபட்சமாக சனிக்கிழமை மட்டும் 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :24 ஏப்ரல் 2021, 7:30 pm

DIN

சென்னையில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், உச்சபட்சமாக சனிக்கிழமை மட்டும் 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து, மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 50 ஆயிரமாக அதிகரித்தது. செப்டம்பா் மாத இறுதியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.50 லட்சத்தையும், அக்டோபா் மாதத்தில் 2 லட்சத்தையும் எட்டியது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சாா்பில் அதிகப்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், உடனடி சிகிச்சை, பாதிக்கப்பட்டோா் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின் காரணமாக, தொற்று பரவல் குறைந்து கடந்த மாா்ச் 1-இல் 171 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது.

4,000-த்தை கடந்தது: கடந்த சில மாதங்களாக பொதுமுடக்கத்தில் இருந்து தளா்வு அளிக்கப்பட்டதாலும், மக்கள் முறையாக முகக் கவசம் அணியாதது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாலும் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.

கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து ஏப்ரல் 10-ஆம் தேதி 2,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து அண்மையில் 3,000-த்தை எட்டியது.

இந்த நிலையில், சனிக்கிழமை மட்டும் (ஏப். 24) 4,086 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னையில் நாளொன்றுக்கு சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேல் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது’ என்றனா்.

ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை-3,05,570

குணமடைந்தோா் எண்ணிக்கை-2,69,526

சிகிச்சை பெறுவோா்-31,506

உயிரிழந்தோா்-4,538

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.