மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மானாமதுரை: ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் எட்டாவது நாள் நிகழ்வாக சனிக்கிழமை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 

News image
மானாமதுரை: ஆனந்தவல்லி, சோமநாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம்
Updated On :24 ஏப்ரல் 2021, 8:04 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் எட்டாவது நாள் நிகழ்வாக சனிக்கிழமை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 

இக்கோயிலில் கடந்த வாரம் சனிக்கிழமை முதல் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாள்களில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் சுவாமி சன்னதி முன்புள்ள ஆறுகால் மண்டபத்தில் வெறும் அலங்காரத்துடன் மட்டும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து அதன்பின் கோயிலுக்குள்ளேயே புறப்பாடாகி வந்தனர். திருவிழா நாள்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண உற்சவம் அம்மன் சன்னதி முன் மண்டபத்தில் நடைபெற்றது இதையொட்டி ஆனந்தவல்லி அம்மனும் பிரியாவிடை சமேதராய் சோமநாதர் சுவாமியும் திருமண அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத்தொடர்ந்து திருமணத்திற்கான சம்பிரதாய பூஜைகள் தொடங்கி நடைபெற்று முடிந்ததும் சோமநாதர் சுவாமி சார்பில் ஆனந்தவல்லி அம்மனுக்கும் அதன்பின் பிரியாவிடைக்கும்  காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்குள் திருமாங்கல்ய நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.  

நிகழ்ச்சியைக் காண குறைந்த எண்ணிக்கையில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். திருக்கல்யாணம் முடிந்ததும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று சுவாமிக்கு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றன. அதன்பின்னர் கோயிலுக்கு வெளியே காத்திருந்த ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் கோயிலுக்குள் நீண்டவரிசையில் நின்று ஆனந்தவல்லி அம்மனையும் சோமநாதர் சுவாமியையும் தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.