ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தமிழகத்திற்கு முழு ஆக்ஸிஜனை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் முழு தேவைக்கேற்ப பகிர்ந்தளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

News image
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Updated On :27 ஏப்ரல் 2021, 11:31 am

DIN

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

தமிழகத்தின் முழு தேவைக்கான ஆக்ஸிஜனை பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியே மேற்கொள்ள வேண்டும்.

ஆக்ஸிஜன் பகிர்ந்தளிப்பது பற்றி தமிழக அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். 

மருத்துவ வல்லுநர்கள் கருத்தை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாக திறக்க நிபந்தனைகளுடன் திமுக ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை விரைந்து பெறுவதற்கான ஒத்துழைப்பை திமுக தொடர்ந்து வழங்கி வருகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.