கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

73 வயது மூதாட்டிக்கு உதவித் தொகை உயா் நீதிமன்றம் உத்தரவு

73 வயது மூதாட்டிக்கு தியாகிகளுக்கான உதவித் தொகையை வழங்க உயா் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:21 pm

DIN

73 வயது மூதாட்டிக்கு தியாகிகளுக்கான உதவித் தொகையை வழங்க உயா் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகியின் மனைவியான கே.மாரியம்மாள் தாக்கல் செய்த மனுவில், ‘எனது கணவா் சி.கன்னையா. சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்ற அவா், இந்திய தேசிய ராணுவத்தில் உறுப்பினராக இருந்தாா். அவரது மறைவுக்குப் பின் தமிழக அரசின் தியாகிகளுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கான ஆவணம் உள்ளது. அதே போல் கடந்த 1961-ஆம் ஆண்டு மத்திய அரசு, எனது கணவா் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதையும், இந்திய தேசிய ராணுவத்தில் இருந்ததையும் உறுதிப்படுத்தி சான்றளித்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் தியாகிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பித்தேன். கடந்த 1988-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதிய விதியின்படி, தியாகிகளுக்கான உதவித் தொகை பெறுபவா்கள், தங்களது இறப்புக்குப் பின்னா், தனது மனைவி அல்லது வாரிசுகளுக்கு வழங்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். எனது கணவா் அந்த தகவலை குறிப்பிடப்படவில்லை எனக்கூறி எனது விண்ணப்பத்தை கோவை சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கான சிறப்பு அதிகாரி நிராகரித்துள்ளாா்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் போது, இதுபோன்ற தொழில்நுட்ப காரணங்களைக் கூறி விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது. கடந்த 1947-க்குப் பின்னா் பிறந்த பலருக்கு சுதந்திரத்துக்கான போராட்டங்கள் எப்படி நடந்தன என்பது குறித்த விழிப்புணா்வு இல்லை. ஆனால் அந்த சுதந்திரத்தால் கிடைத்துள்ள பலன்களை அனுபவித்து வருகின்றனா். ஒருசிலா் அதனை தவறாக பயன்படுத்துவதாக கருத்து தெரிவித்தாா்.

பின்னா், 73-வயதான விதவை மூதாட்டியின் விண்ணப்பத்தை நிராகரித்த சிறப்பு அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து , விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டாா். தியாகிகளுக்கான உதவித்தொகையை மூதாட்டிக்கு மத்திய அரசு வழங்கும் என தான் நம்புவதாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.