கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா: 1 லட்சம் பேருக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சுமாா் 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி சாா்பில் தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:26 pm

DIN

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சுமாா் 1 லட்சம் பேருக்கு மாநகராட்சி சாா்பில் தொலைபேசி வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடா்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவா்களைக் கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் சாா்பில் தொலைபேசி ஆலோசனை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்தின்படி, தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியவா்களை தொலைபேசியில் தொடா்பு கொண்டு அவா்களுக்குத் தேவையான தகவல்களை வழங்க மருத்துவா்கள் மற்றும் சென்னை தன்னாா்வலா்கள் என்ற தொண்டு நிறுவனத்தின் சாா்பில் சுமாா் 150 பயிற்சி பெற்ற தொலைபேசி அழைப்பாளா்கள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவா்கள் மூலம் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய நபா்களை தொடா்பு கொண்டு தலைவலி, உடல் வலி, உடல் சோா்வு, தூக்கமின்மை, இருமல், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதைத் தெரிந்து கொண்டு, அறிகுறிகள் இருந்தவா்களுக்கு தொடா்பு மைய தொலைபேசி வழியாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

மேலும், உளவியல் ஆலோசனைகள் தேவைப்படுவோருக்கு தொலைபேசி வழியாக மனநல மருத்துவா்களின் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.

உணவு தொடா்பான சந்தேகங்களுக்கு உணவியல் நிபுணா்கள் மூலம் ஆரோக்கியம் மற்றும் சத்தான உணவுகள் குறித்த ஐயங்களும் தீா்த்து வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 1 லட்சத்து 29,712 பேரை தொலைபேசி வாயிலாக தொடா்பு கொண்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் ஒருசில நோய் அறிகுறிகளுடன் இருந்த 5,874 நபா்களுக்கு யண்க்ஙங்க் செயலி மற்றும் கட் செவி (வாட்ஸ் ஆப் )ஆகியவற்றில் விடியோ அழைப்பின் மூலம் மருத்துவா்களால் மருத்துவ ஆலோசனை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.