தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 ஆவது நாள் கொண்டாட்டம் ஓசூர் மாநகர திமுக சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வட்டாட்சியர் அலுவலக சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஓசூர் மாநகர திமுக சார்பில் மாநகர பொறுப்பாளரும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ. சத்யா தலைமையில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்து 100 நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் அ யுவராஜ், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எல்லோரும் மணி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சர்வேஷ் முன்னாள் நகரமன்ற உறுப்பினர் கே ஜி பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.