சீர்காழியில் அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்பு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்கள் திருட்டு போனது சிசிடிவி காமிராக்களை உடைத்து வடநாட்டு கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.


சீர்காழி: சீர்காழி அருகே மளிகை மற்றும் இரும்பு கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருள்கள் திருட்டு போனது சிசிடிவி காமிராக்களை உடைத்து வடநாட்டு கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ரவுண்டானா அருகில் பணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜசெல்வம் (33) புதன்கிழமை காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த ராஜசெல்வம் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புடைய மளிகை பொருள்கள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த பணம் ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல அருகிலுள்ள வினோத் ஏஜென்சி என்ற இரும்பு கடையை உடைத்து ரூ.25,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த 8 சிசிடிவி கேமராக்களை சிலவற்றை உடைக்கப்பட்டும், துணியால் மறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதில் ஒரு காமிராவில் பதிவானவற்றில், வடநாட்டு கொள்ளையர்கள் போல் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து புகாரின்பேரில் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...