திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்க உத்தரவு

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்க உத்தரவு

Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:40 pm IST

தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 143 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையை ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் முறையிலும் கலந்தாய்வை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 3ஆம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 10.5 சதவிகிதம் வன்னியர் இடஒதுக்கீடு முறையையும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை நிறைவு பின்னரே சேர்க்கையை இறுதி செய்யவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.