ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாழப்பாடி அருகே யானை தந்தம் கடத்தல் கும்பல் கைது: ரூ. 20 லட்சம் மதிப்புள்ள தந்தங்கள் பறிமுதல்

வாழப்பாடி அருகே, யானை தந்தம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரை வாழப்பாடி வனத்துறையினர் கைது செய்தனர்.

News image
பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு யானை தந்தங்கள்
Updated On :21 ஆகஸ்ட் 2021, 5:18 am

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே, யானை தந்தம் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேரை வாழப்பாடி வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு தந்தங்களையும் பறிமுதல் செய்தனர்.

மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி வழியாக ஒரு கும்பல், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்தி செல்வதாக, சேலம் மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 

இதனைடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவின்பேரில், வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் தலைமையிலான வனத்துறையினர், வாழப்பாடி அடுத்த மேட்டுப்பட்டி சுங்கச்சாவடி பகுதியில் வெள்ளிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ. 20 லட்சம் மதிப்புள்ள இரு யானை தந்தங்களை  5 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்றது தெரியவந்தது. 

இதனையடுத்து, இரு யானைத் தந்தங்களையும் பறிமுதல் செய்த வனத்துறையினர், யானை தந்தங்களை கடத்தல் கும்பலைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விளக்கூர்  சசிகுமார் (22), சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன்குட்டை சேட்டு (41). ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார்( 24),சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தங்கமாபுரிபட்டணம் பரத் (23). மேட்டூர் வீரக்கல்புதூர் பிரவீன்குமார் (24). ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.