எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Updated On :24 ஆகஸ்ட் 2021, 5:58 am

DIN


சீர்காழி: சீர்காழி நகராட்சி அலுவலகம் முன்பு தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சீர்காழி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சாலைகளில் ஆகிய கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்க நகராட்சி துப்புரவு பணியாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த ஊழியர்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஈசானிய தெருவில் உள்ள கம்போஸ்டில் கொட்டப்படுகிறது. 

இந்நிலையில் கடந்த மாதம் முதல் தனியார் துப்புரவு ஊழியர்களைக் கொண்டு குப்பைகள் சேகரிக்கும் பணியை ஒரு மகளிர் சுய உதவிக்குழு மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. 

இதனிடையே இன்று தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டவர்கள்  நகராட்சி முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

Story image

அப்போது பேசப்பட்டபடி ரூபாய் 420 நாள்  ஒன்றுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என கூறி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சீர்காழி நகர் பகுதியில் இன்று குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கிக் கிடந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.