சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரூ.100 கோடி விலை நிலைநிறுத்தம் நிதி ஒதுக்கீடு

தமிழக அரசு மக்கள் நலனைக் காக்கும் விதமாக ரூ.100 கோடியிலான விலை நிலைநிறுத்தும் நிதியை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

News image
ரூ.100 கோடி விலை நிலைநிறுத்தம் நிதி ஒதுக்கீடு
Updated On :25 ஆகஸ்ட் 2021, 12:19 pm

DIN


சென்னை: தமிழக அரசு மக்கள் நலனைக் காக்கும் விதமாக ரூ.100 கோடியிலான விலை நிலைநிறுத்தும் நிதியை ஏற்படுத்தி உள்ளதாக அமைச்சர் ஐ. பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்ட அறிவிப்பில், தமிழக அரசு மக்கள் நலனைக் காக்கும் விதமாக கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் சந்தை குறுக்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.100 கோடியிலான விலை நிலைநிறுத்தும் நிதியை ஏற்படுத்தியுள்ளது.

அத்தியாவசியப் பொருள்களாக அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் உள்ளிட்டவற்றின் விலை அதிகளவில் உயரும்போது அவற்றை கொள்முதல் செய்து, கூட்டுறவு மூலம் விற்பனை செய்து, நுகர்வோருக்கு குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கப் பெறவும், வெளிச்சந்தையில் விலையைக் கட்டுப்படுத்தவும் விலை நிலைநிறுத்தம் நிதி பயன்படுத்தப்படுகிறது என்று அறிவித்தார்.

YouTube video thumbnail

மேலும், தற்போது ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டமானது நாமக்கல், திருவள்ளூர், கன்னியாகுமரி மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் ரூ.293.57 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

32 மாவட்டங்களில் இத்திட்டம் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் இரண்டாம் கட்டமாக செயல்படுத்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.