அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்

இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாததாகிவிட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டைதான் கட்டாயமாகியும் விட்டது.

News image

இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்

Updated On :26 ஆகஸ்ட் 2021, 1:04 pm IST


இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது இன்றியமையாததாகிவிட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டைதான் கட்டாயமாகியும் விட்டது.

தற்போதெல்லாம் குழந்தை பிறந்ததுமே, பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கிறார்களோ இல்லையோ பால் ஆதார் எனப்படும் குழந்தைகளுக்கான ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

Story image

மருத்துவமனையில் குழந்தை பிறந்ததற்காகக் கொடுக்கப்படும் சான்றிதழ் மட்டுமே போதும் இதற்கு. அல்லது பெற்றோரின் ஆதார் அட்டையும் போதும். அப்படியெல்லாம் சிரமப்பட்டு ஆதார் அட்டை வாங்கி வைத்திருக்கும் பெற்றோருக்கு ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால், அவ்வாறு குழந்தைக்கு பால் ஆதார் அட்டை வாங்கிய பெற்றோர், குழந்தைக்கு 5 வயதானதும், ஆதார் சேவை மையங்களுக்குச் சென்று குழந்தைகளின் கைவிரல் ரேகை மற்றும் கருவிழியை பதிவு செய்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

அவ்வாறு செய்யாமல் மறந்துவிட்டால், பால் ஆதார் அட்டை செல்லாததாகிவிடும்.

மேலும் படிக்க.. நாட்டில் கரோனா குறைகிறதா? குறைவதுபோல காட்டப்படுகிறதா?

ஆதார் அமைப்பு இது குறித்து சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அதில், பால் ஆதார் அட்டை குழந்தையின் 5 வயது வரையில்தான் செல்லுபடியாகும். 5 வயதுக்குப் பிறகு குழந்தையின் கைரேகை உள்ளிட்டவை பையோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யாமல் விட்டுவிட்டால், அது செல்லாததாகிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.