சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

7.5% இடஒதுக்கீடு மசோதாவை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது: எடப்பாடி பழனிசாமி

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
Updated On :26 ஆகஸ்ட் 2021, 5:20 am

DIN


அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அதிமுக முழு மனதுடன் ஆதரிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு சட்ட மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று முன்மொழிந்தார்.

ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மசோதா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்,

தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகிதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை அதிமுக வரவேற்கிறது. முதல்வர் முன்மொழிந்த மசோதாவை முழு மனதுடன் அதிமுக ஆதரிக்கிறது என்றார். 

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து குரல் வாக்கெடுப்பின் மூலம் பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.