புதுச்சேரியில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.  
புதுச்சேரியில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி
Updated on
1 min read

புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். 
புதுச்சேரி சட்டப்பேரவையில் ரூ9,924 கோடிக்கு பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தானர். தொடர்ந்து பேசிய அவர், ஆதி திராவிடர் மேம்பாட்டுக்கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்.

புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு முதல் பட்டியலின பிரிவு மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும். பட்டியலின பிரிவு பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என்றார். 
மேலும் புதுச்சேரியில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com