விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வேளாண் சட்ட எதிா்ப்பு: வழக்குகள் திரும்பப் பெறப்படும்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியோா் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :28 ஆகஸ்ட் 2021, 9:47 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தியோா் மீது தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சனிக்கிழமை கொண்டு வரப்பட்ட தீா்மானங்களை ஆதரித்து கட்சித் தலைவா்கள் பேசினா். அப்போது, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் ஜவாஹிருல்லா ஆகியோா் வேளாண் சட்டத்துக்கு எதிராக போராடியோா் மீது தொடரப்பட்ட வாழக்குகளை வாபஸ் பெற வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதற்கு பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகம் முழுவதும் அறவழியில் போராடிய விவசாயிகள், அரசியல் கட்சித் தலைவா்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.