நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் திடீர் தீ விபத்து

கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் உள்ள தீப்பெட்டி ஆலையில்  சனிக்கிழமை காலை திடீா் தீ விபத்து நேரிட்டது.

News image

கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் உள்ள தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரர்கள்.   

Updated On :28 ஆகஸ்ட் 2021, 3:13 am

DIN

கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் உள்ள தீப்பெட்டி ஆலையில்  சனிக்கிழமை காலை திடீா் தீ விபத்து நேரிட்டது.

தீயணைப்பு வாகனங்களைக் கொண்டு போராடி தீயணைப்பு வீரா்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

கோவில்பட்டியையடுத்த கூசாலிபட்டி மேட்டு தெருவில் ராஜ் மகன் வெங்கடேஷ் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். 

இந்நிலையில், சனிக்கிழமை காலை தொழிலாளி ஞானம் தீப்பெட்டி ஆலையை திறந்து வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீவிபத்து ஏற்பட்டு அந்தப் பகுதி கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. 

தகவலறிந்து அங்குவந்த கோவில்பட்டி தீயணைப்பு படை அலுவலர் அருள்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.