சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் செயல்பட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகளில் வரி ஏய்ப்பு மற்றும் கணக்கில் வராத முதலீடுகள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த புகார்களின் அடிப்படையில் சென்னை புரசைவாக்கம், தி.நகர், குரோம்பேட்டை, போரூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் இன்று புதன்கிழமை காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடைக்குள் ஊழியர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.