/

தமிழகத்தில் புதிதாக 731 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 731 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :4 டிசம்பர் 2021, 2:41 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 731 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய சமீபத்திய தரவுகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 731 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,29,792 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 6 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 36,519 ஆக உயர்ந்துள்ளது.

753 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 26,85,203 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இன்னும் 8,070 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

  • சென்னை - 136
  • கோவை - 130

மற்ற மாவட்டங்களில் 100-க்கு கீழ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.