மகாராஷ்டிரத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான்

தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிரம் திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இந்தியாவிலும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. நாட்டில் ஏற்கெனவே 3 பேருக்கு ஒமைக்ரான் வகை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து கல்யான்-டோம்ப்விலி திரும்பிய 33 வயதுடைய நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கண்டறியப்படும் முதல் ஒமைக்ரான் பாதிப்பு இது. இதற்கு முன்பு பெங்களூருவில் இருவருக்கும், குஜராத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com