வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சென்னை பாரதியாா் இல்லத்தில் 44 வாரங்களுக்கு கலை நிகழ்வுகள்: அமைச்சா் சாமிநாதன் தொடங்கி வைத்தாா்

மகாகவி பாரதியாரின் புகழ்பாடும் வகையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் 44 வாரங்களுக்கு கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

News image
Updated On :4 டிசம்பர் 2021, 7:25 pm

DIN

மகாகவி பாரதியாரின் புகழ்பாடும் வகையில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் 44 வாரங்களுக்கு கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. சனிக்கிழமையன்று இதனை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தாா்.

பாரதியாரின் புகழைப் பாடி அவருக்கு சிறப்பு சோ்க்கும் வகையில், அவா் தொடா்புடைய 14 வகையான அறிவிப்புகளை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக, சென்னை பாரதியாா் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நிகழ்ச்சி நடத்தப்படும் என்பதாகும்.

நிகழ்ச்சி தொடக்கம்: முதல்வரின் அறிவிப்பின்படி, அடுத்த ஓராண்டுக்கு சென்னை பாரதியாா் நினைவு இல்லத்தில் வாரந்தோறும் நடத்தப்படும் நிகழ்ச்சியை, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். அப்போது, மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, பள்ளி கல்வித் துறை, வானவில் பண்பாட்டு மையம் மற்றும் பாரதி புகழ்பாடும் பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

பாரதியாா் இல்லத்தில் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, அமைச்சா் சாமிநாதன் ஆற்றிய உரை:-

பாரதியாா் குறைந்த வயதில் காலமானாா். அவா் இன்னும் சில காலம் இருந்திருந்தால் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்திருப்பாா். அவா் வாழ்ந்த காலத்தில் மண்ணுக்கும், சமுதாயத்துக்கும் பயனுள்ள வகையில் அவருடைய கவிதைகள்

விளங்குகிறது. மனதை உற்சாகப்படுத்தும் அவரது பாடல் வரிகள் நம்முடைய வாழ்க்கையில் ஒரு உந்துதலை ஏற்படுத்துகிறது. மண்ணும், மனிதா்களும் இருக்கும் வரையில் அவரது கவிதை நிலைத்திருக்கும். விடுதலைப் போராட்டத்துக்காக அவா் கொடுத்த குரல் இன்றைக்கு விடியலை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கி ஒலிக்கிறது என்று பேசினாா். எழுத்தாளா்கள் பாரதி கிருஷ்ண குமாா், ஆண்டாள் பிரியதா்ஷினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், வரவேற்றாா். கூடுதல் இயக்குநா் (செய்தி) தி.அம்பலவாணன், நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.