எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதித்ததை ஏற்க முடியாது: உச்சநீதிமன்றம்

பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

News image
பேரறிவாளன்
Updated On :7 டிசம்பர் 2021, 6:34 am

DIN

பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சியினர் , தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

சிறையில் இருந்து விடுவிக்க கோரி பேரறிவாளன் தரப்பில் இருந்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

முன்னதாக , பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று வழக்கை விசாரித்த நீதிபதி பேரறிவாளன் விவகாரத்தில் விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் பரிந்துரை மீது முடிவெடுக்க ஆளுநர் நீண்ட காலம் எடுத்துக்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். 

மேலும் இந்த வழக்கில் மத்திய அரசு இனியும் தாமதிக்கக் கூடாது எனத் தெரிவித்ததுடன் வழக்கை அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.