தொடர்ந்து டிச.11 ஆம் தேதி(சனிக்கிழமை) தியானம் மற்றும் யோகாப் பயிற்சி, டிச.12 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோயில் உழவாரப் பணி, மருத்துவ முகாம், டிச.13 ஆம் தேதி (திங்கள்கிழமை) பள்ளி வளாகத் தூய்மை, கைத்தொழில் பயிற்சி, டிச.14 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டி, மருத்துவ முதலுதவி, டிச.15 ஆம் தேதி (புதன்கிழமை) நிலவேம்பு குடிநீர் வழங்கல் மற்றும் சமத்துவப் பொங்கல் உள்ளிட்ட பல்வேறு விதங்களில் நடத்தப்படுகிறது. டிச.16 ஆம் தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. முகாம் ஏற்பாடுகளை, முதல்வர் நித்ய கெளரி, திட்ட அலுவலர் டி.சுதா, துணை திட்ட அலுவலர் பி.மாலா மற்றும் மாணவிகள் கவனித்து வருகின்றனர்.