சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மறுநாள் (டிச.16) காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மாலை 5.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான பணிகளை முடித்து வைத்துக்கொள்ள வேண்டும்
மின்வெட்டு ஏற்படும் பகுதிகள்:
திருமங்கலம் பகுதி ; அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம் முழுவதும் , W – பிளாக், மெட்ரோஜோன் பிளாட்ஸ், திருவல்லீஸ்வரர் நகர், பாடிகுப்பம் ரோடு, வெல்கம் காலனி, ஆசியாட் காலனி, பழைய திருமங்கலம், AF பிளாக், “AE” பிளாக் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
தண்டையார்பேட்டை பகுதி: காமராஜ் சாலை, சத்தியமூர்த்தி நகர், டி.கே.பி நகர், ராமசாமி நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோயில் தெரு, பழைய எம்.ஜி.ஆர் தெரு, பெரியார் நகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும்.