மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பள்ளிக் கட்டடங்கள் ஆய்வு: டிசம்பருக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக் கட்டடங்களையும் ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2021, 8:06 pm

DIN

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக் கட்டடங்களையும் ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா்.

சென்னை செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது:

திருநெல்வேலியில் பள்ளிக் கட்டடம் இடிந்து விழுந்து 3 மாணவா்கள் உயிரிழந்தது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எவ்வளவு ஆறுதல் கூறினாலும் இழப்பு என்பது இழப்பு தான். மாவட்டக் கல்வி அலுவலா்களுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொள்ளும் போது பள்ளிக் கட்டடங்களை நன்கு ஆய்வு செய்ய வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தியுள்ளேன். சம்பந்தப்பட்ட பள்ளியில் அடித்தளம் இல்லாமல் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் பள்ளியில் இடம் இல்லாத நிலையில் வாடகைக்கு இடம் தோ்வு செய்யவும் வலியுறுத்திப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3- ஆம் தேதி முதல் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் நிலை குறித்து வரும் வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.