தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டடங்களை ஆய்வு செய்து இந்த மாத இறுதிக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளையில் பள்ளியில் இடம் இல்லாத நிலையில் வாடகைக்கு இடம் தோ்வு செய்யவும் வலியுறுத்திப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 3- ஆம் தேதி முதல் சுழற்சி முறையின்றி பள்ளிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று பாதிப்பின் நிலை குறித்து வரும் வாரங்களில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளிகளில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு அறிவிக்கப்படும் என்றாா் அவா்.