மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்:  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார புத்தாக்கப் பயிற்சி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில்  கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் ஊராட்சி மன்ற  தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார ஒருநாள் புத்தாக்க பயிற்

News image
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில்  கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் ஊராட்சி மன்ற  தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
Updated On :18 டிசம்பர் 2021, 7:45 am

DIN

கும்மிடிப்பூண்டி: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் மூலமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில்  கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் ஊராட்சி மன்ற  தலைவர்களுக்கு தேசிய ஊட்டச்சத்து வார ஒருநாள் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
 
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மாவட்ட திட்ட அலுவலர்  வழிகாட்டுதல்படி, கும்மிடிப்பூண்டி வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்  ஞானமணி தலைமையில் இந்த பயிற்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்றது.

நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு பேசும்போது, ஆரோக்கியமான குழந்தை வளர்ப்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு துறையினர் பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு குழந்தை வளர்ச்சித் திட்டம் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் பட விளக்க காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சத்தான உணவு வகைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் கண்காட்சியும் வைக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சிக்கான பொருள்கள் வழங்கப்பட்டது .

இந்த நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே. ஆனந்தகுமார் , மாவட்ட கவுன்சிலர்கள் சாரதம்மா முத்துசாமி, ராமஜெயம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கிழ்முதலம்பேடு கே.ஜி.நமச்சிவாயம், மாநெல்லூர் லாரன்ஸ், கண்ணன்கோட்டை கோவிந்தசாமி,  தேர்வாய் முனிவேல்,     பனப்பாக்கம் கே. எஸ்.சீனிவாசன், குருவாட்டுச்சேரி கோமதி சேகர்,பெரிய ஓபுளாபுரம் செவ்வந்தி மனோஜ், பாதிரிவேடு என். டி. மூர்த்தி, கொள்ளானூர் துர்கா தேவி வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கூட்ட முடிவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் லில்லிகுமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.