தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாரூர் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். 

News image

பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக பாசன நீரை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி. உடன் சட்டபேரவை உறுப்பினர் தே.மதியழகன், செயற்பொறியாளர் குமார் உள்ளிட்டோர்.

Updated On :18 டிசம்பர் 2021, 5:25 am

DIN


கிருஷ்ணகிரி: பாரூர் ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்கான பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி வந்தனர். 

இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய் மூலம் இரண்டாம் போக பாசனத்திற்காக பாசன நீரை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி திறந்து வைத்தார். அப்போது பர்கூர் சட்டபேரவை உறுப்பினர், தே மதியழகன், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்  குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாரூர் பெரிய ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பாரூர், கோட்டப்பட்டி, அரசம்பட்டி, ஜிங்கல்கதிரம்பட்டி, தாதம்பட்டி, கீழ்குப்பம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெறுவர். 

பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு பிரதான கால்வாயிலிருந்து வினாடிக்கு 50 கன அடியும், மேற்கு பிரதான கால்வாயிலிருந்து வினாடிக்கு 70 கன அடி வீதம் 135 நாள்களுக்கு, முதல் 5 நாள்களுக்கு பிறகு முறை பாசனம் வைத்து மூன்று நாள்கள் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டும், நான்கு நாள்கள் மதகை மூடி வைத்தும் இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். மேலும் விவசாயிகள் பொதுப்பணித் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.