பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடைக்கானல் சிறுமி கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளா

News image
கொடைக்கானல் சிறுமி கொலை வழக்கு: சிபிசிஐடி-க்கு மாற்றம்
Updated On :23 டிசம்பர் 2021, 6:12 am

DIN

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியை அடுத்த தாண்டிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சத்தியராஜ் என்பவரின் 9 வயது மகள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடிய போது பள்ளி வளாகத்திலேயே உடல் கருகிய நிலையில் சிறுமி உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக தாண்டிக்குடி காவல்நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக டிஜிபு சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.