தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி: புதிதாக 605 பேருக்கு கரோனா
தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 97 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறிகளுடன் 97 போ் சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. அவா்களது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான 34 பேரில் 16 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மற்றொருபுறம் மாநிலத்தில் புதிதாக 605 போ் கரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 172 பேரும், கோவையில் 88 பேரும், செங்கல்பட்டில் 50 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 663 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 1,336-ஆக அதிகரித்துள்ளது.
மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 6,562 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 9 போ் பலியாகியதை அடுத்து நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 36,744-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...