எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

புதுவையில் 2 பேருக்கு ஒமைக்ரான் உறுதி

புதுவையில் கரோனா தொற்று உறுதியான இருவருக்கு ஒமைக்ரான் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2021, 9:44 am

DIN

புதுவையில் கரோனா தொற்று உறுதியான இருவருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் உருமாறிய கரோனா, ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸாக பரவி வருகிறது. அதிவேகமாக ஒமைக்ரான் பரவக்கூடியது என்பதால் பல நாடுகளில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவலைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுவையில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவை லாஸ்பேட்டையைச் சேர்ந்த 20 வயது பெண், உருளையன்பேட்டையைச் சேர்ந்த 80 வயது முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றனர்.

கடந்த 7-ம் தேதி இவர்களின் மாதிரிகள் பெங்களூருவுக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருவருக்கும் உருமாறிய ஒமைக்ரான் தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இருவரும் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். 

இவர்கள் மூலம் அதன்  பரவல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, அவர்களையும் தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறுகையில், புதுவையில் இதுவரை 90 பேரின் மாதிரிகள் சந்தேகத்தின் பேரில் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அதில் இரண்டு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 வயது பெண், 80 வயது முதியவருக்கு தொற்று ஏற்பட்டு குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து புதுவையில் தொற்று ஏதேனும் உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்யவும், தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களிருவரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் ஏதேனும் தொற்று பரவலுக்கு தொடர்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.