சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் எனும் புதிய வகை கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் என விதிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதும் ஒமைக்ரான் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கரோனா பரவலைக் கண்காணித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசும் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துதல், தொற்றுக்கு ஆளானவர்களின் தொடர்புகளையும் பரிசோதனை செய்து தனிமைப்படுத்தல், பரவலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் டிசம்பர் தொடக்கத்தில் 1,088 ஆக இருந்த கரோனா பாதிப்பு தற்போது 1,720 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


