எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுகவை மீட்டு மீண்டும் ஆட்சி அமைப்பதில் சசிகலா பங்கு இருக்கும்: டிடிவி தினகரன்

அதிமுகவை மீட்பதிலும், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதிலும் சசிகலாவின் பங்களிப்பு முழுமையாக இருக்கும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார். 

News image
அதிமுகவை மீட்டு மீண்டும் ஆட்சி அமைப்பதில் சசிகலா பங்கு இருக்கும்: டிடிவி தினகரன்
Updated On :3 பிப்ரவரி 2021, 9:22 am

DIN

மதுரை: அதிமுகவை மீட்பதிலும், தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்பதிலும் சசிகலாவின் பங்களிப்பு முழுமையாக இருக்கும் என்று அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறினார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியது: பெங்களூருவில் இருந்து பிப்ரவரி 7 ஆம் தேதி சசிகலா வரவுள்ளார். அவருக்கு தமிழக எல்லையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவர் எதற்காக சிறை சென்றார். உண்மையான காரணம் என்ன என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும். அவர் சிறையிலிருந்து வெளியே வரும் சூழலி்ல் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையறிந்நு தமிழக மக்கள் மிகுந்த வேதனையுற்றனர்.

சசிகலாவின் வருகையை தமிழகமே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. அவரது வருகை தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுகவை அவர் மீட்டுடெடுப்பார். 

நான் மன்னிப்புக் கடிதம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. யார் தவறு செய்தவர்களோ அவர்கள் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும். 

திமுக ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும்,  அதிமுகவை மீட்டெடுக்கவும் அமமுகவை தொடங்கினோம்.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டப்படி அவர் தான் பொதுச் செயலர். பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அவருக்குத் தான் அதிகாரம் உள்ளது. ஆகவே சட்ட ரீதியாக கட்சியை மீட்போம்.

அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளர் மறைந்தாலோ அல்லது செயல்படாத நிலையிலோ தான் மற்றவர்கள் பொதுக்குழுவைக் கூட்ட முடியும்.

பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழு தேர்தலை நடத்த முடியும். பதவி வழங்கவும் அதிகாரம் உள்ளது.

நான்கு பேர், ஐந்கு பேர், பத்து பேர் கூடி அவர்களே பதவியை நீக்குவது வேடிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக வழக்கு தொடுத்துள்ளோம். நீதிமன்றம் முடிவு செய்யும் வரை காத்திருப்போம்.

தேர்தலுக்கு அமமுக தயாராகி வருகிறது. இப்போதைய சூழ்நிலையில் சசிகலா தேர்தலில் சட்டப்படி போட்டியிட முடியாது என்றாலும் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுப்போம். நான் தனிமைப்படுத்தப்பட்டதாக சிலர்  குட்டையை குழப்ப நினைக்கின்றனர். என்னை யாரும் தனிமைப்படுத்தவில்லை.

எங்களை குழப்ப நினைத்தவர்கள் அவர்கள் தான் குழம்பி போய் உள்ளனர். அமமுக  ஸ்லீப்பர் செல் நபர்கள் அவர்கள் பணியை சரியாக செய்வர்.  சசிகலாவை ஆதரித்து போஸ்டர் அடித்தவர்களை கட்சியிலிருந்து நீக்குவதையும், துணை முதல்வர் மகன் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்ததையும் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

தலைகீழாக நின்றாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக என்ற தீய சக்கியை ஆட்சிக்கு வருவதை ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனுமதிக்க மாட்டார்கள். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அமைவது உறுதி. அதற்கு சசிகலாவின் பங்கு இருக்கும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.