பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மறைந்த முதல்வர்கள் அனைவரது வீடுகளையும் நினைவில்லமாக மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம் கருத்து

மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

News image
மறைந்த முதல்வர்கள் அனைவரது வீடுகளையும் நினைவில்லமாக மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம் கருத்து
Updated On :4 பிப்ரவரி 2021, 10:16 am

DIN

சென்னை, பிப்.4:  மறைந்த முதல்வர்கள் அனைவரது வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என கருத்து தெரிவித்த உயர் நீதிமன்றம், இன்னும் எத்தனை காலத்துக்கு இதுபோன்ற நினைவில்லங்களை அமைக்கப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ள தீபக் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி,  நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபக் தரப்பில், ஜெயலலிதா நினைவில்லத்தை பராமரிக்க அறக்கட்டளை அமைத்து இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், தமிழகத்தில் சமுதாயத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் முதல்வர்கள், தலைவர்கள் என 17 பேரின் வீடுகள், நினைவு இல்லங்களாக பராமரிக்கப்படுகின்றன. அந்த தலைவர்கள் வாழ்ந்த வீடுகளை கையகப்படுத்தி நினைவு இல்லங்கள் அமைப்பது  புதிதல்ல எனத் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தனது அதிகாரத்துக்குட்பட்டு சட்டம் இயற்றியுள்ளது. இன்னும் எத்தனை காலத்துக்கு இது போன்ற நினைவில்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்?   மறைந்த முதல்வர்கள் அனைவரின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என கருத்து தெரிவித்தார்.

இதே நிலைத் தொடர்ந்தால் துணை முதல்வர்களின் வீடுகளும் மாற்றப்படும் போலிருக்கிறது. பல நீதிபதிகளும் நீதித்துறைக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு சிலை அமைக்க நீதிமன்ற வளாகத்தில் இடம் இல்லை. தமிழக அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்த முடியாது. பின்னர், தீபக்கின் மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.