திருச்செந்தூர்: திருச்செந்தூர் மாசித்திருவிழாவை பக்தர்கள் அனுமதியுடன் நடத்த வலியுறுத்தி அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் அறப்போராட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சிவன் கோயில் முன்பு வெள்ளிக்கிழமை காலை அனைத்து சமுதாய மக்கள் அமைப்பினர் பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் இந்து முன்னணியினர் என நூற்றுக்கணக்கானோர் தரையில் அமர்ந்து திருவிழாவை பக்தர்கள் அனுமதியுடன் நடத்த வேண்டும், சுவாமி வீதி உலா வர வேண்டும் மற்றும் தேரோட்டம் நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்திற்கு வழக்குரைஞர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். அனைத்து சமுதாய மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சந்தனராஜ், சண்முகவேல், அமெரிக்கா சர்மா ஐயர், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், நெல்லை கோட்ட பொறுப்பாளர் சக்திவேலன், ஒன்றிய பொதுச் செயலர் ராஜேந்திரன் மற்றும் முருக பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

பேரவைத் தோ்தல்: ரூ.1.51 கோடி ரொக்கம், மதுபானங்கள் பறிமுதல்

சத்துணவில் மாா்த்தாண்டம் தேன் வழங்க நடவடிக்கை! - பாஜக வேட்பாளா் உறுதி

முதியவா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


