எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கூத்தாநல்லூரில் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

News image
கூத்தாநல்லூரில் சைக்கிள் பேரணியை வரவேற்ற போது...
Updated On :7 பிப்ரவரி 2021, 10:12 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவாரூர் ஒளிரவன் ஃபவுண்டேசன் சார்பில், நிறுவனர் மற்றும் தலைவர் இரா.குணசேகரன் ஏற்பாட்டின்படி, தமிழ்நாடு நுகர்வோர் பாதுக்காப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ் முன்னிலையில், 30 மாணவர்கள் கலந்துகொண்ட  விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

திருவாரூரில் தொடங்கி வந்த பேரணியை, கூத்தாநல்லூர் காவல் நிலையம் முன்பு, லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எம்.உதயகுமார், வர்த்தக சங்கத் தலைவர் கு.ரவிச்சந்திரன், செயலாளர் ஜெ.சுவாமிநாதன், நாம் மனிதர் அறக்கட்டளை மாவட்டத் தலைவர் பி.எம்.முஹம்மது சுலைமான், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றச் செயலாளர் என். செல்வராஜ், கூத்தாநல்லூர் நுகர்வோர் பாதுகாப்பு சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மைய செயலாளர் கருணாநிதி, சமூக ஆர்வலர் கோஸ்.அன்வர்தீன் உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். 

சைக்கிள் பேரணி, ஏ.ஆர். சாலை, பெரியக் கடைத்தெரு, வடபாதிமங்கலம் பிரதான சாலை, மருத்துவமனை சாலை வழியாக லெட்சுமாங்குடி பாலத்தை அடைந்தனர்.

அங்கு, குணசேகரன் பேசியதாவது:  புற்றுநோயால் யாரும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவே, 2010 ஆம் ஆண்டு, கிடாரங்கொண்டான் தியாகராஜர் நடுநிலைப்பள்ளியில்  மாணவர்கள் மத்தியில் முதற்கட்டமாக தொடங்கப்பட்டு, 5 பள்ளிகளில் நடத்தப்பட்டன. தொடர்ந்து, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து, திருவாரூர் முதல் புதுச்சேரி வரை, திருவாரூர் முதல் சென்னை வரையிலும் என சைக்கிள் பேரணி மேற்கொள்ளப்பட்டன. மாணவர்கள் புகையிலைப் பழக்கத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். போதைப் பொருளுக்கு அடிமையாகி விடக்கூடாது என்பதற்காகத் தான், சைக்கிளில், கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. புகையிலையில் அடங்கியுள்ள நச்சுப் பொருள்களில் 300-க்கும் மேற்பட்ட நச்சுப்பொருள்கள் உள்ளன. புகையிலையை மாணவர்கள் பயன்படுத்தக் கூடாது. புகையிலைக்கு ஆள்பட்டவர்கள் நிச்சயமாக குணமாகலாம். புகையிலையை ஒழித்து, புற்றுநோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.