ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அவிநாசி: சாலையில் கண்டெடுத்த ரூ.10,000-ஐ காவல்நிலையத்தில் ஒப்படைத்த சரக்கு வாகன ஓட்டுநர்

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் கீழே தவறவிட்ட ரூ.10 ஆயிரம் பணக்கட்டைச் சரக்கு வாகன ஓட்டுநர் அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 12:52 pm

DIN

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் கீழே தவறவிட்ட ரூ.10 ஆயிரம் பணக்கட்டைச் சரக்கு வாகன ஓட்டுநர் அவிநாசி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒப்படைத்தார்.

அவிநாசி சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (48). சரக்கு ஆட்டோ ஓட்டுநரான இவர் திங்கள்கிழமை காலை அவிநாசி வடக்கு ரத வீதியில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இவருக்கு முன்னால், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ரூ.10,000 பணக்கட்டைக் கீழே தவறவிட்டுச் சென்றுள்ளார். 

அதைக் கவனித்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரமோகன், பணத்தை எடுத்து உடனே இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து  சென்றுள்ளார். இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டுநர் வேகமாகச் சென்றுவிட்டாராம் இதையடுத்து சந்திரமோகன், கீழே விழுந்து கிடந்த ரூ.10 ஆயிரத்தை அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கீழே தவறவிட்டுச் சென்ற ரூ.10 ஆயிரத்தைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த சந்திரமோகனுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.