ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திருச்செந்தூர் முருகன் கோயிலில் புதிய செயல் அலுவலர் பொறுப்பேற்பு

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக பா.விஷ்ணு சந்திரன் (32) ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2021, 9:33 am

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செயல் அலுவலராக பா.விஷ்ணு சந்திரன் (32) ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டார்.

இத்திருக்கோயில் இணை ஆணையராக இராமேஸ்வரம் கோயில் ஆணையர் சி.கல்யாணி கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் பா.விஷ்ணுசந்திரனை திருக்கோயில் செயல் அலுவலராக நியமத்து கடந்த ஜன.27-ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதையடுத்து ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணுசந்திரன் திங்கள்கிழமை பகலில் திருக்கோயிலில் மூலவர், சண்முகர் உள்ளிட்ட சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செயல் அலுவலராகப்  பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 2018 முதல் பரமக்குடி மற்றும் நாகர்கோயிலில் சார் ஆட்சியராகவும், 2019 முதல் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும் பதவி வகித்துள்ளார்.

இத்திருக்கோயிலில் கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரி சா.ப.அம்ரித் செயல் அலுவலராகப் பதவி வகித்தார். தற்போது 2-வது முறையாக ஐ.ஏ.எஸ். அதிகாரி பா.விஷ்ணுசந்திரன் செயல் அலுவலராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.