பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வழக்குரைஞர் தேர்தலில் பணம், மது பாய்ந்தோடுகிறது: நீதிமன்றம்

வழக்குரைஞர் சங்கத் தேர்தலில் பணமும் மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :9 பிப்ரவரி 2021, 12:19 pm

DIN

வழக்குரைஞர் சங்கத் தேர்தலில் பணமும் மதுவும் பாய்ந்தோடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது..

சேலம் வழக்குரைஞர் சங்க தேர்தலுக்கு சிறப்புக் குழுவை நியமித்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், பொங்கியப்பன் அமர்வு, சட்டமன்ற தேர்தல்களுக்கும், வழக்குரைஞர் சங்கத் தேர்தல்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என கருத்து தெரிவித்தனர்.

வழக்குரைஞர்கள் மதுவிற்கு தங்களை விற்பதாகவும், வழக்குரைஞர் சங்க நிர்வாகிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவதாகவும், மிரட்டுவதாகவும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.

ஏப்ரலுக்குள் சேலம் வழக்குரைஞர் சங்கத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை நியமித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.