மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தருமபுரியில் ஜல்லிக்கட்டு: 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தருமபுரியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

News image
தருமபுரியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க முயலும் மாடுபிடி வீரர்கள்.
Updated On :13 பிப்ரவரி 2021, 6:47 am

DIN

தருமபுரி: தருமபுரியில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

தருமபுரி அருகே சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக நடைபெற்றது.

இதில், தருமபுரியில் 130 காளைகள் மற்றும் கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 500 காளைகள் பங்கேற்றன. இந்த காளைகளை அடக்க தமிழகம் முழுவதிலும் இருந்து ஐந்து சுற்றுகளாக 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

Story image

காளைகளை அடக்க முயலும் மாடுபிடி வீரர்கள்.

இப் போட்டிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசல் வழியாக முதலில் கோவில் காளை திறந்துவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏனைய‌ மாடுகள் ஒவ்வொன்றாக திறந்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.

வீரர்களிடம் பிடிபடாமல் சென்ற காளைகள் வெற்றி பெற்றதாக அறிவித்து, அதன் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Story image

இப் போட்டிகளை காண ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இவர்கள் அமருவதற்கு பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களிலிருந்து 600 காவலர்கள் ஈடுபட்டனர்.

தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பிரவேஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), ஜல்லிக்கட்டு பேரவை கௌரவத் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், தருமபுரி ஜல்லிக்கட்டு பேரவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.