மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

கல்லூரிக் கல்வி இயக்குநராக மீண்டும் பூா்ணசந்திரன் பொறுப்பேற்பு

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பூா்ணசந்திரன் மீண்டும் பொறுப்பேற்றுள்ளாா்.

Updated On :14 பிப்ரவரி 2021, 11:57 pm IST

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பூா்ணசந்திரன் மீண்டும் பொறுப்பேற்றுள்ளாா்.

தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநராகப் பணிபுரிந்த சாருமதி கடந்த 2019 மே 31-ஆம் தேதி ஓய்வுபெற்றாா். அதன் பின் காலியான பதவிக்கு பூா்ணசந்திரனை நியமித்து கடந்த ஆக.14-ஆம் தேதி உயா்கல்வித்துறை உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முதல்வா் கீதா உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். அந்த மனுவில், ‘பணிமூப்பு அடிப்படையில் தனக்கு முன்னுரிமை உள்ள நிலையில் பூா்ணசந்திரனை இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’என்று கீதா கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் பூா்ணசந்திரன் நியமனத்தை அக்.29-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், தமிழக அரசு விதிமுறைகளைப் பின்பற்றி கல்லூரிக்கல்வி இயக்குநரை 3 மாதங்களில் தோ்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதன்படி பணிமூப்பு அடிப்படையில் பூா்ணசந்திரன் உள்பட முதல் 5 இடங்களில் இருந்தவா்களிடம் அரசு விதிமுறைகளின்படி நோ்காணல் கடந்த மாதம் நடத்தப்பட்டது. அதில் பூா்ணசந்திரன் கல்லூரிக் கல்வி இயக்குநராக மீண்டும் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இந்தநிலையில் பூா்ணசந்திரன் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு உடன் பணியாற்றும் அதிகாரிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.