கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர்: ஓ.பன்னீர் செல்வம்

பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் நரேந்திர மோடி என்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

News image
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
Updated On :14 பிப்ரவரி 2021, 6:40 am

DIN


பாரத தேசத்தின் பாதுகாவலர் பிரதமர் நரேந்திர மோடி என்று நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது, அதிமுக அரசின் நடவடிக்கைக்கு பிரதமர் ஆதரவு அளித்து வருகிறார். 

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒத்துக்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்திற்கு இரண்டு முக்கிய ரயில்  திட்டங்களைக் கொடுத்தமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி கூற வேண்டும். 

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம் தான்.

பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால் தமிழகம் உள்பட நாடு முழுவதும் கரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியினராக இருந்தாலும் நல்லதை பாராட்ட தவறாதவர் பிரதமர் நரேந்திர மோடி என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.