ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திமுக, ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று: ஓ.பன்னீர்செல்வம்

திமுக, ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

News image
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்
Updated On :15 பிப்ரவரி 2021, 3:48 am

DIN

திமுக, ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக  கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி. தாய்த்திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அரங்கில் பெரும் அவமானத்தையும்,அரசுக்கு  மாபெரும் இழப்பையும் தேடித்தந்த 2G இமாலய அலைக்கற்றை ஊழல், வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல்,கூவம் நதி ஊழல் என எண்ணிலடங்கா

ஊழல்களை விஞ்ஞான ரீதியில் புரிந்த திமுக ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று. பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் திமுகவின் ஊழல்களை மக்கள் மறந்திருப்பர் என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஊழலால் புரையோடிப்போன திமுகவின் கரைபடிந்த ஆட்சியை அகற்றத் தான்

தமிழக மக்கள் எங்களோடு கைகோர்த்து உங்களை வீட்டிற்கு அனுப்பினர் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஊழலும் திமுகவும் வேறு வேறு அல்ல என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இரட்டை இலை மீண்டும் மீண்டும் துளிர்ப்பதை தீயசக்திகளால் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.