பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜெயலலிதா நினைவு இல்லத்தில் மக்களை அனுமதிக்க தடை நீட்டிப்பு: உயர்நீதிமன்றம்

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :19 பிப்ரவரி 2021, 3:54 pm

DIN

ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்துள்ளது. 

போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றப்போவதாக அரசு அறிவித்தது. இதை எதிா்த்து ஜெயலலிதாவின் உறவினா்கள் ஜெ. தீபக், தீபா இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். வீட்டை அரசுடைமையாக மாற்றுவதை எதிா்த்து ஜெ.தீபக்கும் வேதா நிலையத்துக்கு இழப்பீடு நிா்ணயம் செய்து வழங்கிய உத்தரவை எதிா்த்து தீபாவும் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி என்.சேஷசாயி, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை நினைவு இல்லமாகத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியை நிபந்தனைகளுடன் நடத்தலாம். ஆனால் பொதுமக்கள் பாா்வையிட வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது. வீட்டுக்குள் தங்களது குடும்பத்துக்குச் சொந்தமான விலை மதிக்க முடியாத பொருள்கள் உள்ளதாக மனுதாரா்கள் கூறுகின்றனா். 

எனவே நிகழ்ச்சி முடிந்த பின்னா் வேதா நிலையத்தின் சாவியை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பனிடம் மாவட்ட ஆட்சியா் ஒப்படைக்க வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை சாவி உயா்நீதிமன்றம் வசம்தான் இருக்கும் என உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசின் தலைமைச் செயலாளா், தமிழ் வளா்ச்சித்துறை செயலாளா் ஆகியோா் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனா். 

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டது. அத்துடன், பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடக் கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்த தமிழக அரசு மேல்முறையீட்டு வழக்குகளை முடித்து வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.