சாலை விரிவாக்க பணிக்குக் குளத்திலிருந்து நீர் எடுக்க விவசாயிகள் எதிர்ப்பு
திருச்சி - புதுக்கோட்டை சாலை விரிவாக்க பணிக்காக குண்டூர் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.


திருச்சி - புதுக்கோட்டை சாலை விரிவாக்க பணிக்காக குண்டூர் பெரிய குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் எதிர்வரும் சாகுபடிக்கு போதிய நீர் கிடைக்காது என்பதால் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி ஒப்பந்ததாரர்கள் டீசல் மோட்டார் வைத்து நீர் எடுக்கும் பணியை மேற்கொண்டனர். இதை அறிந்த விவசாயிகள் தண்ணீர் எடுக்க வந்த லாரிகளை சிறைபிடித்தும், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நவல்பட்டு போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இனி தண்ணீர் எடுக்க மாட்டார்கள் என உறுதியளித்ததைத் தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...